<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
  <channel>
    <title>DSpace Community:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11877</link>
    <description />
    <pubDate>Sat, 21 Feb 2026 11:12:54 GMT</pubDate>
    <dc:date>2026-02-21T11:12:54Z</dc:date>
    <item>
      <title>The Bible as a Public Book: An Asian Perspective</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12029</link>
      <description>Title: The Bible as a Public Book: An Asian Perspective
Authors: Victoria
Abstract: This article explores the multifaceted impact of the Bible in Asia, transcending&#xD;
religious boundaries and shaping cultural, interfaith, ethical, political, and socioeconomic&#xD;
dimensions. Drawing inspiration from biblical verses, the article delves into&#xD;
the ways the Bible serves as a living testament to the dynamic role it plays as a public&#xD;
book in the diverse tapestry of Asian cultures. The cultural influences of the Bible are&#xD;
examined, showcasing how biblical narratives, symbols, and teachings have inspired&#xD;
literature, art, and shared cultural heritage across Asia. The article further explores the&#xD;
role of the Bible in fostering interfaith dialogue, emphasizing shared values and narratives&#xD;
that promote understanding, tolerance, and cooperation among diverse religious&#xD;
communities. Ethical foundations derived from biblical teachings are discussed,&#xD;
illustrating how concepts of compassion, justice, integrity, and humility have become&#xD;
integral to the moral compass of Asian societies. The article highlights the Bible’s&#xD;
influence on societal values, family dynamics, business practices, and interpersonal&#xD;
relationships, contributing to a shared moral fabric that transcends religious boundaries.&#xD;
In the political realm, the Bible’s impact is analysed, revealing its influence on&#xD;
governance structures, political ideologies, and public policies across Asia. Challenges&#xD;
and opportunities arising from the Bible’s influence in Asia are addressed, acknowledging&#xD;
the need for careful navigation in the face of diverse cultural and religious interpretations.&#xD;
Interfaith tensions, socioeconomic disparities, gender dynamics, and political&#xD;
instrumentaliation are identified as challenges, while opportunities for social harmony&#xD;
and empowerment through education are presented. In conclusion, the article advocates&#xD;
for an understanding and collaborative approach to harness the positive impact of the&#xD;
Bible in the rich tapestry of Asian cultures and societies.</description>
      <pubDate>Mon, 01 Jan 2024 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12029</guid>
      <dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>சமயமும் பண்பாடும்: புரிதலும் பகிர்தலும் - நல்லிணக்க சமூகம் கருதிய ஓர் ஆய்வு</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12028</link>
      <description>Title: சமயமும் பண்பாடும்: புரிதலும் பகிர்தலும் - நல்லிணக்க சமூகம் கருதிய ஓர் ஆய்வு
Authors: Siththanthan, G.
Abstract: சமயம் என்பதனை ஆங்கிலத்தில் ‘றிலிஜன்’ என்பர். இந்தச்சொல்&#xD;
நுணுக்கமாகக் கையாளப்பட வேண்டியது எனும் பொருளுடையது. மனிதன் சமூக&#xD;
இசைவாக்கத்துடனும், விழிப்புணர்வுடனும் செயற்பட வேண்டியவன் என்பதை&#xD;
அடிப்படையாகக் கொண்டே சமயம் என்ற சொல்லானது பன்மைத்துவ சமூகத்தில்&#xD;
மேனிலை பெறுகின்றது. இதனடிப்படையில் சமயம் என்ற சொல்லானது 'சமயோசிதம்"&#xD;
என்பதுடன் தொடர்புபட்டுவருகிறது. சொற்பொருள் விளக்க அடிப்படையில் பார்த்தால்,&#xD;
'சம" என்பதன் அடியாக வந்து சமத்துவத்தை ஏற்படுத்தும் கொள்கையுடையது&#xD;
சமயமெனலாம். ஏற்றத்தாழ்வற்ற வாழ்வுக்கு, ஆளகத்தொடர்புஇ ஆளிடைத்தொடர்பு&#xD;
மூலம் முறையே மனிதன் தான் பக்குவப்பட்டும் ஏனையோரைப் பக்குவப்படுத்தியும்&#xD;
வாழ வேண்டியுள்ளது. இப்பகைப்புலத்திலிருந்துதான் ‘பண்பாடு’ பிறக்கின்றது.&#xD;
இஸ்லாத்தின் கருத்துப்படி பூமியில் இறைவன் மனிதர்களை ஒவ்வொரு வடிவமுள்ள&#xD;
முகத்துடன் படைத்தது பிரிந்து வாழாமல் புரிந்து வாழ்வதற்காகும். எனவே மனிதன் தான் வாழ்வாங்கு வாழ்ந்து, மற்றவரையும் வாழவைத்து மேநிலைபெறச் செய்வதற்காக&#xD;
‘சமயமும் பண்பாடும்’ உதவுகின்றன எனும் அடிப்படையில் இவ்வாய்வு அமைகின்றது.&#xD;
இந்த ஆய்வின் ஆய்வுப் பரப்பாக யாழ்ப்பாணப் பிரதேச மதங்கள் அமைகின்றன.&#xD;
பல இன மத (இசுலாம், கிறித்தவ, இந்து, பௌத்த) மக்கள் வாழுகின்ற ஓரு&#xD;
பிரதேசத்தில் அவரவர் தத்தமது மத ஆளுமையுடனும், ஏனைய மதங்கள் மீதான&#xD;
மதிப்புணர்வுடனும் நடந்துகொள்வது நல்லிணக்க வாழ்விற்கு உதவும். ஆனால்,&#xD;
நடைமுறையில் தத்தமது சமயநெறிப்படி வாழாமையும், ஏனைய சமயங்கள்&#xD;
தொடர்பான வெறுப்புணர்வும் இவ்வாய்வின் ஆய்வுப் பிரச்சினையாகின்றது. சமயங்கள்&#xD;
தனியாளையும் சமூகத்தையும் இணைப்பதற்காகத் தோன்றின என்ற அடிப்படையில்&#xD;
ஒவ்வொருவரும் ஏனைய சமயங்கள் மீது மதிப்பு வைத்து நடப்பது சமூக ஒற்றுமையை&#xD;
ஏற்படுத்தும். கொல்லாமை, சமத்துவக் கொள்கை, அறியாமையினைப் போக்குதல்&#xD;
முதலான அம்சங்களைக் கொண்டு விளங்கிய சமண, பௌத்த சமயச் செயற்பாடுகளால்&#xD;
இந்துமதம் காலத்துக்கேற்றவாறு தன்னைச் சீர்படுத்தியிருக்கின்றது. சகோதரத்துவத்தை&#xD;
ஒரு வாழ்வியல் அம்சமாகக்கொண்ட இஸ்லாம் சமத்துவப்பாதைக்கு நல்ல&#xD;
ஆதர்சமாகும். இலங்கை வரலாற்றில் றோமன் கத்தோலிக்கரதும், தொடர்ந்து வந்த&#xD;
ஒல்லாந்தர், ஆங்கிலேயர் மூலமான புரட்டஸ்தாந்து, கிறிஸ்தவரதும் தொடர்பால்&#xD;
முறையியல் சார்ந்த கல்வி மூலமாகப் பெருநன்மையினை இலங்கைச் சைவர்களும்&#xD;
பெற்றார்கள். அன்பு, அகிம்சை முதலான மனித விழுமியப்பண்புகளை கிறிஸ்தவ&#xD;
சமயமும் கொண்டிருந்தது. றோமன் கத்தோலிக்கரைப் பொறுத்தவரை அவர்கள்&#xD;
யாழ்ப்பாணத்திலே சைவ சமயத்தவர்களுடன் நெருக்கமாக வாழ்வதால், இந்துசமய&#xD;
நடைமுறைகளுடன் தொடர்புபட்டவகையில் இவர்களது வழிபாட்டுமுறைகள்&#xD;
காணப்படுகின்றன. இவ்வாய்வின் முதன்மை நோக்கமாக. 'கடவுள் ஒருவர்"&#xD;
என்பதையும், அவரைச் சார்ந்து வாழ்வதற்கான வழிகள்தான் பல என்பதையும்&#xD;
உணர்ந்து அந்த நெறிகளை வளர்க்கும் உபாயப் பண்பினை அறிதலுடன் துணை&#xD;
நோக்கங்களாக, சமயங்களில் மனிதவிழுமியத்திற்கு மாறான எதிர்மறைச்&#xD;
செயற்பாடுகளைக் களைந்து எல்லோரும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள்&#xD;
என்ற கருணையுணர்வோடு தனித்த, பன்மைத்துவ நிலையில் இயன்றவரை&#xD;
சகவாழ்விற்கு அரவணைத்து செல்லுதல் என்பதாக அமைகின்றது. இது பண்புசார்&#xD;
ஆய்வாகக் காணப்படுவதால் வரலாற்று முறை, ஒப்பீட்டு முறை, விபரண முறை&#xD;
போன்ற ஆய்வு முறையியல்கள் இந்த ஆய்விலே பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வின்&#xD;
மூலமாகப் பெறப்படுகின்ற பயன்களாக சமய விழுமியங்களை அனைவரும் பகிர்ந்து&#xD;
கொள்ளும் வகையில் சமயத்தின் நடைமுறைகள் இருப்பதோடு, சமயங்களில் சமூக&#xD;
முன்னேற்றத்திற்குத் தடையாகவுள்ள செயற்பாடுகளும் நீக்கப்படுதல் வேண்டும்.&#xD;
அனைத்து உயிர்களும் இன்புற்றிருக்க இறைவனைப் பிரார்த்தனை செய்வதன்மூலம்&#xD;
ஒவ்வொருவரும் அன்புடன் உயரிய வாழ்வு வாழ்வதற்கான சூழ்நிலை உருவாகும்.</description>
      <pubDate>Mon, 01 Jan 2024 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12028</guid>
      <dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>கிறிஸ்தவ இறையியல் பார்வையில் பொது இடங்களில் வீசப்படும் குப்பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழற் பாதிப்பு (யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதி)</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12027</link>
      <description>Title: கிறிஸ்தவ இறையியல் பார்வையில் பொது இடங்களில் வீசப்படும் குப்பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழற் பாதிப்பு (யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதி)
Authors: Dhevananth, A.
Abstract: சமகால சமூகத்தின் முதன்மை பிரச்சனைகளில் பொது இடங்களில் வீசப்படும்&#xD;
குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசடைவதனால் ஏற்படும் விளைவுகளும் ஒன்றாகும்.&#xD;
யாழ் மாநகர பிரதேசத்தில் அநேக இடங்களில் வீதியோரங்களில் மக்கள் பொறுப்பற்ற செயற்பாடான குப்பைகள் வீசுதல், பொலித்தீன் பிளாஸ்ரிக் சரியான ரீதியில் பிரித்து&#xD;
குப்பைகளை வேறாக்காமை, வீதியோரங்களிலும் பாவனை அற்ற காணிகளிலும்&#xD;
குப்பைகளை எறிதல், சுய நல நோக்கில் தனது வீட்டை சுத்தமாக்கி கொண்டு&#xD;
அயலை அசிங்கப்படுத்துதல், சமூகத்தில் நடைபெறும் கலைவிழாக்கள்&#xD;
கொண்டாட்டங்கள் என்பனவற்றில் குப்பைகளை தகுந்த இடத்தில் போடாமை போன்ற&#xD;
பிரச்சனைகளை அவதானிக்கின்றோம். இதனால் பெரும் தீமைகளையும்&#xD;
விளைவுகளையும் மக்களே சந்திக்கினறனர். இந்நிலையில் இருந்து மக்களை&#xD;
மீட்டெடுப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும் கடந்த 5 ஆண்டுகளில் புள்ளிவிபரங்கள்&#xD;
அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர சபை பிரதேசத்திற்குள் அதிகளவு குப்பைகள்&#xD;
வீதிகளிலும் கரைஓரங்களிலும் மற்றும் வடிகால்களிலும் தேங்கி நிற்பதையும்&#xD;
இதனால் டெங்கு, வயீற்றோட்டம், காய்ச்சல், நீர் மாசடைதல், குடி நீர் தட்டுப்பாடு,&#xD;
மிருகங்களின் மரணங்கள் போன்றன நிகழ்வதையும் அறிய முடிகின்றது. இதற்கான&#xD;
தரவுகளை யாழ் மாநகர சபை கழிவகற்றும் பகுதி அறிக்கைகள், பிரதேச செயலக&#xD;
தரவுகள், வைத்தியசாலை அறிக்கைகள், மற்றும் இணையத்தள அறிக்கைகள்,&#xD;
பத்திரிகை தரவுகள், சஞ்சிகைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு&#xD;
இவ்வாய்வுப் பிரச்சனையை தெளிவான முறையில் விளக்குகின்ற விபரண ஆய்வாக&#xD;
இது அமைந்துள்ளது. இவ் ஆய்வானது எண்ணியம் சார் தரவுகளையும் பண்பு சார்&#xD;
தரவுகளையும் அடிப்படையாக கொண்ட கலப்பு முறை ஆய்வாக காணப்படுகின்றது.&#xD;
நாம் வாழும் சுற்றுச்சூழல் ஆனது திருத்தூதரான பவுல் கூறியது போல இந்நாள்&#xD;
வரை படைப்புக்கள் அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்று தவிக்கின்றது.&#xD;
இங்கே பவுல் படைப்பு ழுழுவதையும் சுட்டிக்காட்டுகின்றார். இந்த படைப்பு&#xD;
வேதனையுற்று தவிப்பதற்கு மனிதர்கள் பொறுப்பாளிகளாக இருக்கின்றனர்.&#xD;
ஆண்டவராகிய கடவுள் மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர்&#xD;
மூச்சை ஊத மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் என்பதை மனிதன் மறந்துவிட்டான்.&#xD;
இப்போது இந்த பூமி தவறாக நடத்தப்படுவதனால் வருந்துகின்றது. படைப்பிலும்இ&#xD;
இயற்கையிலும் படைத்தவரோடு தங்களுக்கு இருக்கும் பொறுப்பையும் கடமைகளையும்&#xD;
மக்கள் இறைவனின் பார்வையில் இயற்கையை பார்க்க ஒவ்வொரு மனிதனும்&#xD;
முன்வரவேண்டும். படைப்புக்களுக்கெல்லாம் சிகரமாக மனிதன் தான் சார்ந்த&#xD;
இடத்தையும் சுற்றுச் சுழலையும் பாதுகாப்பதுடன் வீட்டுக்கழிவுகளை சரியான&#xD;
முறையில் பிரிப்பதும் மீள் சுழற்ச்சிக்கு பயன்படுத்த தூண்டுவதும் தேவையான&#xD;
சரியான பாதுகாப்பின் அடிப்படையில் நுகர்வுகலாச்சரங்களை மாற்றுவதும் தேவையற்ற&#xD;
பிளாஸ்ரிக் பாவனைகளை தவிர்ப்பதும் போன்ற விடயங்களை இறையியல் சார்&#xD;
எண்ணங்களுடன் எடுத்துரைப்பதுடன் இவற்றின் அடிப்படையில் மனிதர் தாம் வாழும்&#xD;
இருப்பிடம் சார் சூழலை பாதுகாப்பது என்பது தம்மைப் படைத்த இறைவனின்&#xD;
எதிர்பார்ப்பு என்பதை உணர்ந்து சுற்றுச் சூழல் இறையியலை தமது வாழ்வில்&#xD;
கடைப்பிடித்து தம் சுற்றுச்சூழலை கர்ப்ப வேதனையில் இருந்து மீட்டெடுக்க&#xD;
அழைப்பதே இவ்வாய்வின் முடிவு.</description>
      <pubDate>Mon, 01 Jan 2024 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12027</guid>
      <dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
    </item>
    <item>
      <title>சமயங்களும் சமகால உரையாடல்களும்</title>
      <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12026</link>
      <description>Title: சமயங்களும் சமகால உரையாடல்களும்
Authors: Philip Sudhakar, S.
Abstract: கீழ்க்கண்ட கேள்விகளால் எனது ஆய்வுக் கட்டுரையை மேம்படுத்த&#xD;
விரும்புகிறேன்: சமூக எதார்த்தங்களை உள்வாங்குவதில் சமயங்களுக்கு உள்ள&#xD;
சிக்கல்கள் யாவை? சமூகச் சிந்தனை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும்&#xD;
மாற்றத்திற்கும் சமகாலத்தில் சமயங்களின் பங்களிப்புகளாக எவற்றைக் குறிப்பிட&#xD;
முடியும்? சமுதாயம் - பொருளியல் - அரசியல் - பண்பாடு போன்ற தளங்களில்&#xD;
சமயம் எத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றன? வழிபாடுகளுக்கும்&#xD;
சடங்குகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிற சமயங்கள் சமூகத்தில்&#xD;
பற்றியெரியும் எந்தச் சிக்கல்களையும் கவனிப்பதில்லை என்கிற எதார்த்த நிலைக்கான&#xD;
காரணங்கள் எவை? பொருளியல் - அரசியல் - பண்பாடு போன்றவற்றின் வெளிச்சத்தில்&#xD;
காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைவுப்படுத்திக் கொள்ள சமயங்கள் எத்தகைய&#xD;
உரையாடல்களை மேற்கொள்ளலாம்?&#xD;
எனது ஆய்வு சமயங்களின் கடந்த காலச் சமூகப் பங்களிப்புகளை அலசி&#xD;
ஆராய்வதோடு நிகழ்காலத்தில் அவற்றின் நேர்மறையான, முற்போக்கான&#xD;
பங்களிப்புகளையும் கணக்கில் கொள்கிறது.</description>
      <pubDate>Mon, 01 Jan 2024 00:00:00 GMT</pubDate>
      <guid isPermaLink="false">http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12026</guid>
      <dc:date>2024-01-01T00:00:00Z</dc:date>
    </item>
  </channel>
</rss>

