<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <channel rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8332">
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8332</link>
    <description />
    <items>
      <rdf:Seq>
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8375" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8374" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8372" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8370" />
      </rdf:Seq>
    </items>
    <dc:date>2026-04-07T13:32:07Z</dc:date>
  </channel>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8375">
    <title>திறந்த பொருளாதாரத்தின் பின்னர் இலங்கையின் மொத்த உள்நாட்டு முதலீட்டிற்கும் தனியார் முதலீட்டிற்குமிடையிலான தொடர்பு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8375</link>
    <description>Title: திறந்த பொருளாதாரத்தின் பின்னர் இலங்கையின் மொத்த உள்நாட்டு முதலீட்டிற்கும் தனியார் முதலீட்டிற்குமிடையிலான தொடர்பு
Authors: Kalaipriya, J.; Uthayakumar, S.
Abstract: அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தனியார் முதலீட்டினை தமது பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றன. இலங்கையில் 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார கொள்கைகள் தனியார் முதலீட்டு மட்டத்தினை தீர்மானிப்பதில் கணிசமான பங்கினை வகித்துள்ளது. இவ்வாய்வானது இலங்கையில் பொருளாதாரத்தில் 1977இன் பின்னரானமொத்த உள்நாட்டு முதலீட்டில் சாராத மாறிகளான தனியார் முதலீடு, பொது முதலீடு, நாணயமாற்று வீதம், வட்டி வீதம் மற்றும் பணவீக்கம் போன்றன எவ்வாறன தாக்கத்தினைச் செலுத்துகின்றன. என்பதனை மதிப்பீடு செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்விற்கு 1977 தொடக்கம் 2016 வரையுள்ள காலத்தொடர் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பொருளாதார மாறிகள் தனியார் முதலீட்டின் மீதான தாக்கத்தினை மதிப்பீடு செய்வதற்கு பன்மடங்கு பிற்செலவு அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மாதிரியுருக்க ளினை மதிப்பிடுவதற்காக சாதாரண இழிவுவர்க்க மதிப்பீட்டு முறை (OLS) பயன்படுத்தப் பட்டது. தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு EViews 9 பொருளியளவை கணினி மென்பாகப் பொதிகள் பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் மொத்த உள்நாட்டு முதலீட்டினை தீர்மானிப்பதில் பேரின பொருளாதார மாறிகளில் நாணயமாற்று வீதம், பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் தவிர்ந்த ஏனைய மாறிகள் புள்ளிவிபரரீதியாக பொருளுள்ள வகையில் நேர்க்கணியத் தாக்கத்தினை கொண்டுள்ளது என்பதனை அனுபவரீதியான ஆய்வு காட்டுகின்றது. இருப்பினும் இத்தாக்கமானது குறிப்பிட்ட சில வருடங்களின் பின்பே பேரினப் பொருளாதார மாறிகளின் மீது செல்வாக்கினைச் செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவ்வாய்வு இலங்கையில் முதலீட்டின் மூலம் எதிர்பார்க்கப்படும் முழுமையான பலனை அடைந்து கொள்வதற்கு முதலீட்டினை கவர்வதில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பொருத்தமான துறைகள் என்பன அடையாளம் காணப்பட்டு சிபார்சுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.</description>
    <dc:date>2017-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8374">
    <title>தென்மராட்சிக் கல்வி வலயப் பாடசாலை வளங்களின் கிடைப்பனவு , மற்றும் பயன்பாட்டு நிலையினைத் தீர்மானிக்கும் காரணிகள்</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8374</link>
    <description>Title: தென்மராட்சிக் கல்வி வலயப் பாடசாலை வளங்களின் கிடைப்பனவு , மற்றும் பயன்பாட்டு நிலையினைத் தீர்மானிக்கும் காரணிகள்
Authors: Saravanabavan, K.; Anushya, S.
Abstract: கல்வியை வழங்குவதில் பாடசாலைகள் காத்திரமான பங்கினை வகிக்கின்றன. பாடசாலைகள் தமது பணியினை நிறைவேற்ற கல்விசார் வளங்கள் அவசியமாகும். தென்மராட்சிக் கல்வி வலயப் பாடசாலைகளின் பெளதிகவளங்களின் கிடைப்பனவு, பெளதிக வளங்களின் பயன்பாட்டு நிலை, ஆளணிவளக் கிடைப்பனவு என்பனவற்றினைத் தீர்மானிக்கும் காரணிகளில் அதிக ஆதிக்கம் செலுத்தும் காரணியினை அறிவதாகவும் அதிபரின் செயற்பாடுகள் மற்றும் வலயக் கல்விப் பணிமனையின் வழிகாட்டல் என்பன பௌதிக வளக் கிடைப்பனவுடன் எவ்வகையான தொடர்புடைமையைக் காட்டுகின்றன என்பது பற்றியதாக இவ்வாய்வு அமைகின்றது. தென்மராட்சிக் கல்வி வலயத்தில் IAB, IC, வகை II பாடசாலைகள் யாவும் கருதப்பட்டு குறுக்குவெட்டுப் பரப்பளவாய்வாக இவ்வாய்வு அமைகின்றது. வினாக் கொத்துக்கள், நேர்காணல்கள், அவதானிப்புகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டு வகைப்பிரிப்புச் செய்யப்பட்டு SPSS மென்பொருள் மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. பகுப்பாய்வுக் கருவியாக காரணிப் பகுப்பாய்வு, பல்தரப் பிற்செலவு முறைகள் கைக்கொள்ளப்படுகின்றன. அதிபர் சார் தரவுகளை ஆய்வு செய்ததன் பேரில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பானது அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் காரணியாகக் காணப்படுகின்றது. ஆசிரியர் சார் தரவுகளின் அடிப்படையில் ஆசிரியரது செயற்பாடுகள், வளக்கிடைப்பனவு, வளப்பயன்பாட்டில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது. அதிபர்களது செயற்பாடுகளுக்கும், பெளதிக வளக் கிடைப்பனவிற்குமிடையில் பொருண்மையான தொடர்பு அவதானிக்கப்பட்டுள்ளது. வலயக். கல்விப் பணிமனையின் வழிகாட்டலுக்கும், பெளதிக வளக் கிடைப்பனவிற்குமிடையில் பொருண் மையான தொடர்பு காணப்படவில்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு என்னென்ன காரணிகளை எந்தளவிற்கு உயர்த்த வேண்டும் என்ற விதத்தில் ஆய்வுப் பிரதேசத்தில் சீராக்கங்கள் மேற்கொள்ளப்படலாம்.</description>
    <dc:date>2017-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8372">
    <title>இலங்கையின் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வும் நிலம் மற்றும் நீர் தரமிழத்தலும்</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8372</link>
    <description>Title: இலங்கையின் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வும் நிலம் மற்றும் நீர் தரமிழத்தலும்
Authors: Rajendram, K.; Pratheeparaja, N.; Thanuja, R.
Abstract: எந்தவொரு பிரதேசத்தினதும் அபிவிருத்தியைத் தீர்மானிப்பது அப்பிரதேசத்திற்குரிய வளங்களாகும். முப்பது ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் யாழ்பாண மாவட்டத்தில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. இவ் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக வடமராட்சி கிழக்கில் அதிகளவில் மணலகழ்வு இடம்பெறுகின்றது. அந்தவகையில் இவ்வாய்வானது வடமராட்சி கிழக்கில் மணலகழ்வு அதிளவு இடம்பெறும் இடங்களையும், அளவையும், நிலம் தரமிழத்தலையும் அடையாளம் காணல் மற்றும் பாதிப்புக்களை இனங்கண்டு அவற்றினைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்வைத்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வுக்கான அடிப்படை தரவுகள் மற்றும் தகவல்கள் பல களவாய்வு மற்றும் நேர்காணல்கள் மூலமே பெறப்பட்டுள்ளன. நேர்காணலுக்கான மாதிரிகள் எழுமாற்று மாதிரி எடுப்பு முறை மூலமே பெறப்பட்டுள்ளன. தரவுப் பகுப்பாய்வுக்காக, சராசரி நியமவிலகல் , வீச்சு , புவியியல் தகவல் தொழில்நுட்ப முறையில் (தலைமுறை10.4) முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மண் அகழ்வு இடம் பெறும் பிரதேசங்களின் நீர் மற்றும் நிலத்தின் தரத்தினை மின்கடத்துதிறன், உவராதல் மற்றும் அமில காரத்தன்மை தொடர்பான அளவீடுகள் மூலம் அறிய முடிந்தது. அந்தவகையில் ஆய்வுப் பிரதேசத்தில் நீர் உவராதல் மணல் அகழ்வு குழிகளை அண்டி நீரின் மின்கடத்துதிறன் (Electrical conductivity) 3700-15750 us/cm வரை வேறுபட்டு காணப்படு கின்றது. நீரின் pH பெறுமானம் மணல் குழிகளை அண்டி ஏழுக்கு கூடிய காரத்தன்மையை கொண்டதாகவும் காணப்படுகின்றன. மண்ணின் pH பெறுமானம் மணல் குழிகளை அண்டி 7 இற்கு கூடிய காரத்தன்மையை கொண்டதாகவும் காணப்படுகின்றது. மணல் அகழ்வினால் விவசாய நடவடிக்கைகளில் பாதிப்பும், மணல் அகழ்விற்காக தாவரப்போர்வைகள் அகற்றப்படுதலால் உயிர்ப்பல்வகைத் தன்மை பாதிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கண்டல் தாவரங்களை வளர்த்தல் பிரதியீட்டுப் பொருட்களைப் பயன்படுத்துதல், தாவரவே லிகளை அமைத்தல், மணல் அகழ்வு குழிகளை மட்டமாக்கலும் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தலின் மூலம் குறைத்துக் கொள்ள முடியும்.</description>
    <dc:date>2017-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8370">
    <title>யாழ் மாவட்டத்திலுள்ள வலிகாமப்பிராந்தியத்தில் யுத்தத்திற்கு பின்னர் சுற்றுலா விடுதிகளின் வளர்ச்சியும் சவால்களும்</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8370</link>
    <description>Title: யாழ் மாவட்டத்திலுள்ள வலிகாமப்பிராந்தியத்தில் யுத்தத்திற்கு பின்னர் சுற்றுலா விடுதிகளின் வளர்ச்சியும் சவால்களும்
Authors: Pathmashani, K.
Abstract: சுற்றுலா என்பது பொழுதுபோக்கிற்கும் கலாசார தேவைகளை நிறைவேற்றுவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் அவசியமாக காணப்படுவதுடன் சமூக பொருளாதார அபிவிருத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் யுத்தத்தின் பின் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்து கொண்டிருக்கும் வேளையில் யாழில் பல எண்ணிக்கையான விடுதிகளும் அதிகரித்தன. இவ்விடுதிகள் அதிகரித்த நிலை, யுத்தத்தின் பின் சுற்றுலா விடுதிகளின் வசதிகளின் வளர்ச்சி, சுற்றுலா விடுதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற வினாக்களை உள்ளடக்கியதாக யாழ் வலிகாமப் பிராந்தியத்திலுள்ள முதன்மையான 9 சுற்றுலா விடுதிகள் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டன. இவ் விடுதிகளின் அறை எண்ணிக்கையின் வளர்ச்சி, அறையின் வசதி, மண்டப வசதி, ஊழியர், பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர், சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலாப் பயணிகளின் வருகை, பொழுதுபோக்கு வசதி, போக்குவரத்து வசதி, உணவு, உணவு வழங்கல் , அறைகளின் வாடகை , சுற்றுலா விடுதிகளின் மொழி வளர்ச்சி போன்ற விடயங்களையும் சுற்றுலா விடுதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகும். இச்சவால்களை வெற்றி கொள்வதற்கான பரிந்துரைகளும் இவ் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.</description>
    <dc:date>2017-01-01T00:00:00Z</dc:date>
  </item>
</rdf:RDF>

