<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rdf:RDF xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#" xmlns="http://purl.org/rss/1.0/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <channel rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/105">
    <title>DSpace Collection:</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/105</link>
    <description />
    <items>
      <rdf:Seq>
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10170" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10157" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10156" />
        <rdf:li rdf:resource="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10155" />
      </rdf:Seq>
    </items>
    <dc:date>2026-04-08T11:13:30Z</dc:date>
  </channel>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10170">
    <title>The Situation of Young People in Textile Shops: A Case Study of Jaffna Town, Sri Lanka</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10170</link>
    <description>Title: The Situation of Young People in Textile Shops: A Case Study of Jaffna Town, Sri Lanka
Authors: Baskaran, N.</description>
    <dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10157">
    <title>தேசிய வீடமைப்பு செயற்திட்டம்: யாழ் மாவட்டத்தில் மணியந்தோட்ட கிராமத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10157</link>
    <description>Title: தேசிய வீடமைப்பு செயற்திட்டம்: யாழ் மாவட்டத்தில் மணியந்தோட்ட கிராமத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு
Authors: Ranushiya, J.; Srikanthan, S.
Abstract: மனித வாழ்வின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக வீடு அமைகின்றது. உலகின் பெரும்பாலான சமூகங்கள் அனுபவிக்கும் சிக்கலான பிரச்சினையாகவும் காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் பல கொள்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இலங்கையில் சுமார் 22 வீதமான மக்கள் வீடமைப்பு வசதிகள் இன்மையால் இன்னல்களை அனுபவித்து வருவதாக கூறிய அமைச்சர் சயித் பிரேமதாஸ தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நாடளாவிய ரீதியில் 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019 வரையான காலப்பகுதி வரை காணியற்றவர்களுக்கு இலவசமாக காணிகள் வழங்கியதுடன், வீடற்றவர்களுக்கு நிரந்தர வதிவிட வசதிகளை ஏற்படுத்தும் கொள்கையின் நிமித்தம் "மாதிரி கிராமம்” என்னும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதி உதவியுடன் வீடற்றவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்தினார். இத்திட்டமானது "நாட்டில் ஒரு குடிசை வீடுகளும் இருக்கக்கூடாது” எனும் தொனிப் பொருளுடன் மக்களின் செழிப்பான எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தலின் போது சயித் தோல்வியுற்றதனால் இக்கொள்கை இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களின் அன்றாட வாழ்வில் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாக மாற்றங்களினையும் இது ஏற்படுத்தியுள்ளது. யாழ் மாவட்டத்தில் நல்லூர் பிரதேச பிரிவுட்குட்பட்ட மணியந்தோட்ட கிராமத்தினை ஆய்வு புலமாகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</description>
    <dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10156">
    <title>மத்தியகிழக்கு நாடுகளில் தொழில்புரிந்த பணிப்பெண்களின் சமூக அனுபவங்கள்: நுவரெலியா, நாகசேனை கிராமசேவகர் பிரிவினை அடிப்படையாக கொண்ட விடய ஆய்வு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10156</link>
    <description>Title: மத்தியகிழக்கு நாடுகளில் தொழில்புரிந்த பணிப்பெண்களின் சமூக அனுபவங்கள்: நுவரெலியா, நாகசேனை கிராமசேவகர் பிரிவினை அடிப்படையாக கொண்ட விடய ஆய்வு
Authors: Vinoth, P.; Srikanthan, S.
Abstract: பணிப்பெண் வேலைவாய்ப்பு என்பது ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் உலக நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் முறையாகும். ILO வின் அறிக்கையின் பிரகாரம் உலகமெங்கிலுமுள்ள 75 மில்லியன் வீட்டுப் பணியாளர்களில் 72 வீதமானோர் பெண்களாகக் காணப்படுகின்றனர். மத்தியகிழக்கு நாடுகளில் பணிப்பெண்களின் ஊழியத்திற்கான கேள்வி அதிகரித்துக் காணப்படுகின்றது. பொருளாதார ரீதியான பிரச்சினை, வாழ்வாதார செலவின் அதிகரிப்பு மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய வாழ்க்கைத்தரம் என்பவற்றின் காரணமாக இலங்கை போன்ற நாடுகளிலிருந்து அதிகமானோர் வெளிநாடுகளுக்குப் பணியாட்களாகச் செல்கின்றனர். மத்தியகிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாகத் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளுதல் என்பது பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கான ஒரு வழியாகக் காணப்படுகின்றதெனினும் இங்கு பெண்கள் பல்வேறு சமூகப் பண்பாட்டுப் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். இவை அவர்களின் தனி மனித மற்றும் சமூக வாழ்வில் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் இந்த ஆய்வானது இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்குச் சென்று திரும்பிய பெண்களின் சமூக அனுபவங்களைப் பகுப்பாய்விற்கு உட்படுத்துகின்றது. பணிப்பெண்களாகச் சென்ற பெண்கள் தாம் பணிசெய்யும் இடங்களில் எதிர்கொண்ட சமூக-உளப்பிரச்சினைகளையும் அவர்கள் மீளவும் தத்தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய பின்னர் எதிர்கொள்கின்ற சமூக-உளப்பிரச்சினைகளையும் இனங்காண்பது ஆய்வின் பிரதான நோக்கமாகும். பண்புசார் ஆய்வு அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வானது நுவரெலியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாகசேனை கிராம சேவையாளர் பிரிவினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கான முதல்நிலைத் தரவுகள் நோக்கம் கருதிய மாதிரி எடுப்பின் வழியாக தெரிவுசெய்யப்பட்ட மத்திய கிழக்குநாடுகளில் பணியாற்றிய பணிப்பெண்களிடமிருந்து சேகரிக்கப்பட்டன. தகவலாளிகளின் சமூக அனுபவங்கள் அவர்களுடைய விடய வரலாறாகப் பதிவுசெய்யப்பட்டு கருப்பொருள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்வதற்குத் தூண்டிய பிரதான காரணியாகக் குடும்ப வறுமை (60%) காணப்படுகின்றது. மத்தியகிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாகச் சென்ற பெண்களின் சமூக அனுபவங்கள் தனித்துவமானது. பணிபுரிந்த காலத்தில் பெண்கள் உடல்ரீதியான (40%), பாலியல் ரீதியான (26%) துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தமை அவர்களின் விடய வரலாறுகளில் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்ப உறவுகளை நீண்ட நாட்கள் பிரிந்திருத்தல் சார்ந்தும் அவர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளுதல் சார்ந்தும், பல்வேறுபட்ட உளநெருக்கீடுகளை பெண்கள் எதிர்கொண்டுள்ளனர்.</description>
    <dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
  </item>
  <item rdf:about="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10155">
    <title>நீர்த் தேவையினைப் பூர்த்தி செய்தலுடன் தொடர்புடைய சமூக நடத்தைகளும் சமூக விவகாரங்களும்: நெடுந்தீவு மத்தி-கிழக்கு மாதா கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட  ஒரு சமூகவியல் ஆய்வு</title>
    <link>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10155</link>
    <description>Title: நீர்த் தேவையினைப் பூர்த்தி செய்தலுடன் தொடர்புடைய சமூக நடத்தைகளும் சமூக விவகாரங்களும்: நெடுந்தீவு மத்தி-கிழக்கு மாதா கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட  ஒரு சமூகவியல் ஆய்வு
Authors: Meryvinu, J.; Srikanthan, S.
Abstract: நீர் மனித அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது. உலகளாவிய நிலையில் நீர்ப்பரம்பல் செறிவாகக் காணப்பட்டாலும் குடிநீர்ப் பரம்பல் மிகவும் மட்டுப்பாடாகவுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைந்தவகையில் காணப்படுகின்ற தீவுகளில் மக்களின் வாழ்வு என்பது பாரம்பரியமானது. யாழ்குடா நாட்டிற்கு மேற்கே பாக்குநீரிணைப் பகுதியில் அமைந்து காணப்படுகின்ற நெடுந்தீவில் குடிநீர்ப் பற்றாக்குறை என்பது பொதுவான பிரச்சினையாகப் பல தாசாப்தங்களாகக் காணப்படுகின்றது. இங்குள்ள மக்களிடையே நீர்த் தேவைகளைப் பூர்த்திசெய்தலுடன் தொடர்புடைய நடத்தைகளையும் சமூக விவகாரங்களையும் இனங்காணுதல் இந்த ஆய்வின் நோக்கமாகும். பண்புசார் ஆய்வு அணுகுமுறையினை முதன்மையானதாகக் கொண்ட கலப்பு ஆய்வு முறையிலில் அமைந்த ஆய்விற்கான முதன்நிலைத் தரவுகள் நெடுந்தீவு மத்தி-கிழக்கு J/05 மாதா கிராமத்தில் விடய ஆய்வு, நேர்காணல் போன்ற பண்புசார் கருவிகளின் துணையுடனும் சேகரிக்கப்பட்டன. ஆய்வுப் பிரதேசத்தில் நீர் கிடைப்பனவு வழிமுறைகளையும் அதுசார்ந்த வளப்பரம்பல்களையும் அறிந்துகொள்ளும் பொருட்டு வீட்டு அலகு மதிப்பீடும் பயன்படுத்தப்பட்டது. குடிநீர், சமையல், ஏனைய அன்றாடத்தேவைகள் போன்றவற்றிற்கு மக்கள் கிராமத்தின் பொதுக் கிணறுகள், குழாய்நீர் விநியோகம், பொது நீர்த்தாங்கிகள் போன்றவற்றினைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 93 வீத மக்களிடம் வீட்டில் சொந்தக் கிணறுகள் காணப்பட்டாலும் அவை குடிநீர் தவிர்ந்த ஏனைய அன்றாடத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றன. அவையும் வெப்பமான மாதங்களில் வற்றிவிடுகின்றன. குழாய் மூலமான நீர் வசதி 61 வீதமான குடும்பங்களுக்கு கிடைக்கப்பெற்றாலும் அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குழாயில் முதலில் வருகின்ற நீர் குடிநீருக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதுடன் குடும்பத்தில் ஒருவரேனும் குறிப்பிட்ட நேரத்தில் நீர்வருகின்ற நேரம் நீரைப் பெறுதல் வேண்டும் என்பது மக்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அத்துடன் 39 வீதமான மக்கள் தங்களுடைய குடிநீர் தேவையினைப் பூர்த்திசெய்து கொள்வதற்கு பொது நீர்த்தாங்கி, பொதுக் கிணறுகளைப் பயன்படுத்துகின்றனர்.</description>
    <dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
  </item>
</rdf:RDF>

