<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <title>DSpace Collection:</title>
  <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8213" />
  <subtitle />
  <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8213</id>
  <updated>2026-03-06T14:25:06Z</updated>
  <dc:date>2026-03-06T14:25:06Z</dc:date>
  <entry>
    <title>நீரிழிவு நோயில் யாழ்ப்பாணத்து மருத்துவ மூலிகைகள் செயற்படும் திறன் பற்றிய ஓர் ஆய்வு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8272" />
    <author>
      <name>Anbuselvi, S.</name>
    </author>
    <author>
      <name>Sritharan, K.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8272</id>
    <updated>2022-12-06T07:35:38Z</updated>
    <published>2015-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: நீரிழிவு நோயில் யாழ்ப்பாணத்து மருத்துவ மூலிகைகள் செயற்படும் திறன் பற்றிய ஓர் ஆய்வு
Authors: Anbuselvi, S.; Sritharan, K.
Abstract: யாழ்ப்பாணத்தில் உணவுக் கட்டுப்பாட்டுடன் உள்ள நீரிழிவு நோயாளிகள் 50பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்கள் சுயமாக உபயோகிக்கும் மூலிகைகளா சிறுகுறிஞ்சா, கொவ்வை, கருவேப்பிலை, ஆவாரை, நாவல் ஆகிய மூலிகைகளை உபயோகிப்பவர்களில் குருதிக் குளுக்கோசின் அளவு அறியப்பட்டு, நான்கு வாரங்களுக்கு தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது சிறுகுறிஞ்சா உபயோகிப்பவர்களில் குருதிக்குளுக்கோக 244(+/-47,09)-120(+/-40.59), ஆகவும் கொவ்வை 229(+/-61.55) 135(+/-34. 35), கருவேப்பிலை 260(+/-60.17)-145(+/-30.01), ஆவாரை 186.67+/7.28-106.47+/-3.52, நாவல் 176.67+/-7.28-116.67+/-7.28 என ஆரம்ப நிலையில் இருந்து 4 வாரத்தின் பின் குறைந்து காணப்பட்டது. இத்தரவுகளிலிருந்து இம் மூலிகைகள் நீரிழிவு நோயில் சிறப்பாகச் செயலாற்றுகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது.</summary>
    <dc:date>2015-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>இக்கட்டான நிலையில் மீன்பிடித்தல் பாக்குக்குடா பிரதேசத்தில் எல்லைதாண்டும் அத்துமீறல் ஓர் ஆய்வு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8271" />
    <author>
      <name>Soosai, A.S.</name>
    </author>
    <author>
      <name>Isholden, J.</name>
    </author>
    <author>
      <name>Bavin, M.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8271</id>
    <updated>2022-12-06T07:46:26Z</updated>
    <published>2015-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: இக்கட்டான நிலையில் மீன்பிடித்தல் பாக்குக்குடா பிரதேசத்தில் எல்லைதாண்டும் அத்துமீறல் ஓர் ஆய்வு
Authors: Soosai, A.S.; Isholden, J.; Bavin, M.
Abstract: இந்திய இழுவைப் (டோலர்) படகுகள் பாக்குக்குடா நீர்ப் பிரதேசத்தில் இலங்கை கடலாதிக்கப் பரப்பினுள் அத்துமீறி நுழையும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் குறித்த செய்திகளையே 1990 ஆம் ஆண்டின் பின்னர், இலங்கை மற்றும் இந்திய பத்திரிகைகளில், அடிக்கடி தலைப்புச் செய்திக்குரிய விடயமாக இருந்து வருகின்றது. பாக்குக்குடா மோதலில் சேர்த்துக் கொண்டுள்ள புதிய பரிமாணங்களான, இலங்கையின் வடபிராந்திய மீனவ மக்களின் யுத்தத்திற்கு பின்னரான நிலைமை மற்றும் அண்மைக்கால இயல்பு நிலைக்கு திரும்புதல் ஆகிய அடிமட்ட உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வருவதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும். இரண்டாவது நோக்கம் யாதெனில், மோதலின் இயல்பு நிலைமைகளை புரிந்து கொள்வதும், தற்போது ஆட்சியியலின் கீழ் இருப்பதும், அவர்களால் முன்மொழிந்துள்ளதுமான பரிந்துரைகளின் தொடர்புகளைப் பகுப்பாய்வு செய்வதுமேயாகும். பாக்குக்குடா மோதலானது, இந்தியாவின் பரவலாக அறிந்திருக்கின்ற இது பற்றிய உள்ளார்ந்த எண்ணங்களுக்கு மாறுபட்டதாக தற்போது தொழில் நுட்பம் வளங்குன்றிய இலங்கை மீனவர்கள் இந்திய இழுவைப்படகு மீனவர்களினால் பாதிக்கப்படுவதை நாம் இங்கு விவாதிக்கின்றோம். இந்திய தரப்பினர், மோதலின் இயல்பு நிலைமையை விளங்கிக்கொள்ளாத வரைக்கும், இலங்கையின் அதிகாரம் அளிக்கப்பட்டோர் மீனவர்களையும் அவர்களது அரசாங்கத்தையும் நெருக்கமாகக்கொண்டு வராத வரைக்கும் அரசாங்கம் மற்றும் மீனவர் மட்டங்களிலான சகல விதமான மோதல் தீர்வு முயற்சிகளும் வினைத்திறனற்றவைகளாகவே இருக்கும் என இக்கட்டுரையின் முடிவில் குறிப்பிடுகின்றோம்.</summary>
    <dc:date>2015-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>காலனிய யாழ்ப்பாணத்தில் சுதேச உயர்குழாமினர்: மரபும், உருமாற்றமும் பற்றிய ஒரு வரலாற்றுச் சமூகவியல் பார்வை</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8270" />
    <author>
      <name>Rajeswaran, R.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8270</id>
    <updated>2022-12-06T07:43:17Z</updated>
    <published>2015-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: காலனிய யாழ்ப்பாணத்தில் சுதேச உயர்குழாமினர்: மரபும், உருமாற்றமும் பற்றிய ஒரு வரலாற்றுச் சமூகவியல் பார்வை
Authors: Rajeswaran, R.
Abstract: சமூகவியல் ஆய்வுகளில் வரலாற்றுச் சமூகவியற் புலம் சார்ந்த ஆய்வுகள் தனித்துவம் மிக்கவையாக விளங்குகின்றன. வரலாற்றுச் சமூகவியல் ஆய்வுகள் ஒரு குறித்த காலகட்டத்தின் சமூகத்தின் இயக்கம் மற்றும் அசைவியக்கத்தின் போக்குகளை வெளிக்கொணர்கின்றன. இந்த ஆய்வும் ஒரு வரலாற்றுச் சமூகவியல் ஆய்வாக அமைவதால் இலங்கையில் காலனித்துவ காலத்தில் நிகழ்ந்த சமூக உருமாற்றம் ஒன்றினை வெளிக்கொணர்கிறது. இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காலனிய ஆட்சியின்போது சுதேச உயர்குழாமினராக விளங்கிய முதலியார்களிடத்தில் நிலவிய மரபார்ந்த அம்சங்களில் ஏற்பட்ட உருமாற்றங்களை சமூகவியல் கோட்பாடுகளின் பின்புலத்தில் ஆய்வு செய்கின்றது. அத்துடன் காலனித்துவ காலத்தில் சதேச உயர்குழாமின் உருவாக்கத்திற்குப் பின்புலமான காரணங்கள் குறித்தும் விளக்குகின்றது. உயர்குழாம் உருவாக்கம் தொடர்பான சமூகவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் வரலாற்று நூல்கள் முன்னைய ஆய்வுத்தகவல்கள் என்பவற்றின் துணையுடன் யாழ்ப்பாணத்தில் கதேச உயர்குழாமின் உருமாற்றம் சமூக உருமாற்றத்தின் ஒரு கூறாக விளக்கப்பட்டுள்ளது.</summary>
    <dc:date>2015-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>உலக இலக்கியம் பற்றிய எண்ணக்கருவும் தமிழ் இலக்கியச் சூழலும்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8269" />
    <author>
      <name>Kumaran, E.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8269</id>
    <updated>2022-12-06T07:34:40Z</updated>
    <published>2015-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: உலக இலக்கியம் பற்றிய எண்ணக்கருவும் தமிழ் இலக்கியச் சூழலும்
Authors: Kumaran, E.
Abstract: சமகாலத்தில் தமிழ் இலக்கியப் படைப்புலகும் ஆய்வுலகும் உலக இலக்கியக் கருத்தாக்கங்களுடன் தம்மைத் தொடர்புபடுத்திக் கொண்டுள்ளன. இது அறிவியல் வளர்ச்சி, மனித சிந்தனை அகற்சி , மனிதப் பரம்பல் முதலானவற்றின் உடன் விழைவாகும். தவிர்க்க முடியாத இவ்வளர்ச்சி நிலை இலக்கியங்களின் உற்பத்தி மற்றும் ஆய்வுகள் தொடர்பாக கணிசமான பாதிப்பினை ஏற்படுத்தியிருப்பதனை உணரலாம். இப்பாதிப்பு என்பது ஒரு புறத்தில் நன்மையானதாக அமையும் அதேவேளை மறுபுறத்தில் தமிழ் இலக்கியங்களின் தனித்துவம், அடையாளம் குறித்த பாதகமான கருத்து நிலைகளின் வளர்ச்சிக்கு உரங்கொடுப்பதாகவும் அமைந்து விடலாம் எனக் கருதப்படுகின்றது. எனவே உலக இலக்கியக் கருத்தாக்கங்களுடன் தமிழ் இலக்கியங்களைப் பொருத்திப் பார்ப்பதில் கூடுதல் அவதானமும், அக்கறையும், முன்னெச்சரிக்கையும் தேவைப்படுகின்றன. இதனால் கீழைத்தேயமொழிகள் மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு குறித்து அக்கறை செலுத்தும் கீழைத்தேசவியல் (Oriantalism), பின்காலனித்துவம் (Post - Colonialsm) எனும் கோட்பாடுகள் மற்றும் தேசிய இலக்கியம்' பற்றிய எண்ணக்கருத்துக்களின் வழி உலக இலக்கியக் கருத்தாக்கங்களைத் தமிழ் இலக்கியச் சூழலுக்குள் பொருத்திப் பார்ப்பது பயனுடையதாக அமையும். இதனால் தமிழ் இலக்கியப் படைப்புக்களும் அவை குறித்த ஆய்வுகளும் மேலும் ஆழமும் விரிவும் பெறும் எனலாம்.</summary>
    <dc:date>2015-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
</feed>

