<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <title>DSpace Community:</title>
  <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5615" />
  <subtitle />
  <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5615</id>
  <updated>2026-04-10T09:59:31Z</updated>
  <dc:date>2026-04-10T09:59:31Z</dc:date>
  <entry>
    <title>நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் தேசிய கல்வியியற் கல்லூரிகளின்  செல்வாக்கு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5796" />
    <author>
      <name>Muraleetharan, M.</name>
    </author>
    <author>
      <name>Rasanayagam, J.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5796</id>
    <updated>2022-10-21T08:29:58Z</updated>
    <published>2022-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் தேசிய கல்வியியற் கல்லூரிகளின்  செல்வாக்கு
Authors: Muraleetharan, M.; Rasanayagam, J.
Abstract: ஆய்வின் நோக்கம்: கல்வியியற் கல்லூரிகளில் நிறுவன மட்டத்தில் ஆசிரிய&#xD;
கல்வியியலாளர்களின் வாண்மை விருத்தி அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை &#xD;
நடைமுறைப்படுததுவதில் ஏற்படும் தடைகளை இனங்காண்பதும் அவற்றை&#xD;
இழிவாக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதும், நிறுவனமட்டத்தில் நடாத்தக்கூடிய &#xD;
ஆக்கபூர்வமான பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை இனங்காண்பதன் மூலம் ஆசிரிய &#xD;
கல்வியியலாளர்களை வலுவூட்டுவதற்கு வழி வகுப்பதுவும் இவ்வாய்வின் பிரதான &#xD;
நோக்கமாகும். &#xD;
ஆய்வு முறைகள்: நிறுவன மட்டத்தில் ஆசிரிய கல்வியலாளர்களின் வாண்மை விருத்தியை &#xD;
மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களின் பயனுறுதியை அதிகரிக்கும் வழிமுறைகளைக் &#xD;
கண்டறியும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வானது, அளவை ஆய்வு வடிவத்தில் &#xD;
மேற்கொள்ளப்பட்டது. ஆய்வாளன் அல்லது அவனது உதவியாளன் அடிப்படை தரவுகளை, &#xD;
புள்ளிவிபரங்களை சேகரிப்பதற்கு தரவுஉற்பத்தியானது உறுப்புகளை நேரடியாகத் &#xD;
தேடிச்சென்று சேகரிக்கையில் அந்நிலையில் பெறப்படுபவை முதன்மைத்தரவுகள் ஆகும். &#xD;
இலங்கையில் உள்ள 19 கல்வியியற் கல்லூரிகளில் அதிகமான தமிழ்மொழி &#xD;
மூலகற்கைநெறிகளைக் கொண்ட 5 கல்வியியற் கல்லூரிகளே ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. &#xD;
இக்கல்வியியற் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரிய கல்வியியலாளர் 50 பேரிடமும், &#xD;
கல்வியியற்கல்லூரி முகாமைத்துவ அமைப்பின் மேல் மட்டத்திலுள்ள பீடாதிபதி, &#xD;
உபபீடாதிபதிகள் 10 பேரிடமும்,; வினாக்கொத்து, நேர்முகம் காணல், தொலைபேசி &#xD;
உரையாடல்கள் ஆகிய முறைகளில் முதன்மைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இத்தரவுகள் &#xD;
அட்டவணைகள், வரைபுகள் என்பவற்றைப் பயன்படுத்தியும் சதவீதம் காணல் போன்ற &#xD;
கணிப்புக்களினூடாகவும் பகுப்பாய்வு செய்து முன்வைக்கப்பட்டுள்ளன. பொதுநோக்கில் &#xD;
அரசினால் அல்லது நிறுவனங்களினால் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்ட&#xD;
தரவுத்திரட்டு;க்களில் இருந்து (னுயவய டியமெ) ஆய்வாளன் தரவுகளை பெறும் முறை &#xD;
இரண்டாம்நிலைத்தரவுகள் (துணைத்தரவுகள்) எனப்படும். கல்வியியல் கல்லூரிகளில் &#xD;
காணப்பட்ட ஆவணங்கள், புள்ளிப்பதிவேடுகள் பெறுபேற்று அட்டவணைகள் போன்றவற்றில் &#xD;
இருந்து இரண்டாம் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டன. ஒரு பெருந்தொகை மக்களை &#xD;
பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அதிலிருந்து வரையறுத்து தெரிவுசெய்து அம்மக்களின் &#xD;
பிரதிநிதிகளாகப்பயன்படுத்தி அவர்களைக் கொண்டு ஆய்வு செய்து கருத்துக்களை அறிதலே &#xD;
மாதிரி எனப்படும். தமிழ்மொழி மூலமான பாடநெறிகளை நடாத்துகின்ற 8 கல்வியியற் &#xD;
கல்லூரிகளில் 5 கல்வியியற் கல்லூரிகள் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. &#xD;
ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 10 ஆசிரிய கல்வியியலாளர்கள் படையாக்கப்பட்ட மாதிரி &#xD;
எடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர்.&#xD;
ஆய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள்: தொழில்சார் வாண்மை விருத்தி நிகழ்ச்சித் &#xD;
திட்டங்களின் பயனுறுதியை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்விற்காக &#xD;
கல்வியியற் கல்லூரிகளின் முகாமைத்துவக் குழுவினர் ஆசிரிய கல்வியியலாளர்கள் &#xD;
ஆகியோர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதனூடாக பல &#xD;
முடிவுகள் கண்டறியப்பட்டன. &#xD;
முடிவுகள்: கல்வியியற் கல்லூரிகளில் கடமை ஆசிரிய கல்வியியலாளர்களில் 90 &#xD;
சதவீதமானோர் தமது உயர்கல்வித் தகைமையாக குறைந்தது ஒரு முதுமாணிப் &#xD;
பட்டத்தையேனும் பெற்றுக்கொண்டவர்களாகக் காணப்பட்ட போதிலும் மாறிவரும் &#xD;
தேவைகளுக்கேற்ப புதிய தோற்றமுள்ள ஆசிரியர்களை உருவாக்குவதற்கான செயலாற்றுகை &#xD;
தொடர்பாக திருப்திகரமான நிலைமை காணப்படவில்லை. ஆசிரிய கல்வியியலாளர்களிடையே &#xD;
பின்வரும் விடயங்கள் தொடர்பாக நேர்மனப்பாங்குகளையும், திறன்களையும் விருத்தி &#xD;
செய்யப்பட வேண்டியுள்ளது. கல்வியியற் கல்லூரிகளில் வாண்மை விருத்தி&#xD;
நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்து நடாத்துவதில் முகாமையாளர்கள் பல்வேறு &#xD;
பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.&#xD;
ஆய்வின் உட்கோள்கள்: கல்வியியற் கல்லூரிகளில் நிறுவன மட்டத்தில் ஆசிரிய &#xD;
கல்வியியலாளர்களின் வாண்மை விருத்தி அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடை &#xD;
முறைப்படுத்துவதில் ஏற்படும் தடைகளை இனங்காண்பதும் அவற்றை குறைப்பதற்கான &#xD;
வழிமுறைகளைக் கண்டறிவதும், நிறுவன மட்டத்தில் நடாத்தக் கூடிய ஆக்குபூரவமான &#xD;
பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை இனங் காண்பதன் மூலம் ஆசிரிய கல்வியியலாளர்களை &#xD;
வலுவூட்டுவதற்கு வழி வகுப்பதும் இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும் தலைமைத்துவ பாங்கு, &#xD;
பங்குபற்றல் முகாமைத்துவமும், வேலைப்பகிர்வும், கண்காணிப்பு, ஊக்குவிப்பு,&#xD;
ஆலோசனையும், வழிகாட்டலும், தரமான நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்றல் போன்ற &#xD;
உட்கூறுகளை உள்ளடக்கிய வினாககொத்தானது விரிவுரையாளர்கள் மற்றும் முகாமைத்துவக் &#xD;
குழுவினருக்கு வழங்கப்பட்டு பகுப்பாய்வுக்கு உட்பட்டது பயன் மிக்க வகையில் ஆசிரிய &#xD;
கல்வியியலார்கள் வலுவூட்டல் பெறுவதன் ஊடாக நிலையான கல்வி அபிவிருத்தி ஏற்பட &#xD;
வேண்டு மெனில் தேவை அடிப்படையில் நிறுவனமட்டத்தில் வாண்மை நிகழ்ச்சித் திட்டங்கள் &#xD;
மேலும் வினைத்திறனுடன் ஒழுங்கமைக்கப்பட வேண்டியதன் இன்றியமையாமையினை குறித்த &#xD;
ஆய்வானது வெளிப்படுத்தியுள்ளது.</summary>
    <dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>சிவில் யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையின் வெளியுறவுக்கொள்கையில்  சீனாவின் ஆதிக்கம்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5794" />
    <author>
      <name>Arunthavarajah, K.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5794</id>
    <updated>2022-10-21T08:29:57Z</updated>
    <published>2022-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: சிவில் யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையின் வெளியுறவுக்கொள்கையில்  சீனாவின் ஆதிக்கம்
Authors: Arunthavarajah, K.
Abstract: ஆய்வின் நோக்கம்: இலங்கையானது சிவில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னராக சீனாவுடன் &#xD;
ஏற்படுத்திக்கொண்ட நட்பின் இயல்புகளை அடையாளங்காணுதல், இத்தகைய சீனா சார்பான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது சர்வதேச அளவில் ஏற்படுத்திவருகின்ற தாக்கங்களை அடையாளப்படுத்துதல், சிறுபான்மையின மக்களது அரசியலில் இத்தகைய உறவின் பாதிப்புக்களைக் கண்டறிதல், எதிர்காலத்தில் இத்தகைய இலங்கை பின்பற்றி &#xD;
வருகின்ற வெளிநாட்டுக் கொள்கையினால் ஏற்படப்போகின்ற ஆபத்துக்களை எடுத்துக்காட்டுதல் போன்றன ஆய்வினது பிரதான நோக்கங்களாக உள்ளன.ஆய்வு முறைகள்: சமூக விஞ்ஞான ஆய்வு முறைகளில் பண்புசார் முறைகளைப் &#xD;
பயன்படுத்திய வகையில் குறித்த ஆய்வானது மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக வரலாற்று &#xD;
அணுகுமுறை (historical approach), விளக்கமுறை ஆய்வு (descriptive methods)  போன்ற &#xD;
ஆய்வு அணுகுமுறைகளினடிப்படையில் இவ்வாய்வானது செய்யப்படுகின்றது. குறித்த &#xD;
இவ்வாய்வினை நேர்த்தியான வகையில் மேற்கொள்வதற்கு முதல்நிலைத் தரவுகளும் &#xD;
இரண்டாம் நிலைத் தரவுகளும் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல்நிலைத் தரவுகள் &#xD;
என்ற வகையில் கலந்துரையாடலகள், நேர்காணல்கள், அவதானிப்புக்கள் என்பனவும் &#xD;
உள்ளடக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகள் வரிசையில் பிற்பட்ட காலங்களில் &#xD;
குறித்த விடயமாக எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள், பிற பத்திரிகைச் செய்திகள், &#xD;
இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன.&#xD;
ஆய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள்: .இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலே &#xD;
வரலாற்று ரீதியான அரசியல், பொருளாதார பண்பாட்டு உறவுகள் இருந்து வந்துள்ளதனை &#xD;
வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய வரலாற்று ரீதியான இரு &#xD;
நாடுகளுக்குமிடையிலான உறவானது நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னரும் தொடர்ந்தது. அது &#xD;
இலங்கையின் 30 வருட சிவில் யுத்த காலத்தில் மேலும் நெருக்கமானது. சீனாவுடன் மட்டுமன்றி &#xD;
இக்காலப்பகுதியில் மேற்குலகுடனும் இலங்கையின் தொடர்பானது ஓரளவிற்கு சீனாவுடன் &#xD;
கொண்டிருந்த தொடர்பினை ஒத்த வகையிலேதான் அமைந்திருந்தது. இருந்தபோதும் போரின் &#xD;
பின்னதாக சீனாவுடன் இலங்கை கொண்டிருந்த தொடர்பினை மேலும் நெருக்கமாக்கியது. &#xD;
மேற்குலகத்துடனான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை புறந்தள்ளப்பட்டது. &#xD;
ஆய்வின் உட்கோள்கள்: இத்தகையதொரு பின்னணியில் இலங்கையில் நடைபெற்ற &#xD;
படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குறித்த இந்நாடுகள் தங்களது &#xD;
கவனத்தினைச் செலுத்தி இலங்கைக்குத் தலையிடியினைக் கொடுக்க ஆரம்பித்தன. எனவே &#xD;
இலங்கையானது தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்வதன் மூலமாகவே &#xD;
பிற நாடுகளதும் ஆதரவினைப் பெற்று முன்னோக்கிப் பயணிக்க முடியும்.</summary>
    <dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>இயேசுவின் பகிரங்கப் பணிக்காலத்தில் வெளிப்படும் விருந்தோம்பலின் சிறப்புப் பண்புகள் (நற்செய்தி நூல்களை மையப்படுத்திய ஆய்வு)</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5792" />
    <author>
      <name>Herosini, J.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5792</id>
    <updated>2022-10-21T08:29:51Z</updated>
    <published>2022-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: இயேசுவின் பகிரங்கப் பணிக்காலத்தில் வெளிப்படும் விருந்தோம்பலின் சிறப்புப் பண்புகள் (நற்செய்தி நூல்களை மையப்படுத்திய ஆய்வு)
Authors: Herosini, J.
Abstract: ஆய்வின் நோக்கம்: நற்செய்தி நூல்களில் பிரதிபலிக்கின்ற விருந்தோம்பல் பண்புகளானது இயேசுவினுடைய பகிரங்கப் பணியினுடைய பயண வாழ்வில் எவ்வாறு இருந்தது என்பதனை வெளிக்கொணர்வது பிரதான நோக்கமாகும். ஆய்வு முறைகள்: இவ் ஆய்விற்கு விவரண, உய்த்தறிவு மற்றும் தொகுத்தறிவு முறைகள் கையாளப்பட்டுள்ளன. நான்கு நற்செய்தி நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ள விருந்தோம்பலின் சிறப்புப் பண்புகளை இனங்காண்பதற்கு தொகுத்தறிவு முறை கையாளப்பட்டுள்ளது. எனவே விருந்தோம்பலின் பொழுது அன்பு, பகிர்வு, இரக்கம், ஏற்றத்தாழ்வுகள், தாழ்ச்சி, முகமலர்ச்சி, பணிவு, போன்ற பல பண்புகள் நற்செய்தி நூல்களில் தொகுத்தறிவு முறை ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இயேசு பகிரங்கப் பணிக்காலத்தில் விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். இதனை உய்த்தறிவு முறை ஊடாக உணர முடிகின்றது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் நற்செய்தியில் எடுத்துக் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள், சம்பவங்களை தெளிவுபடுத்த விவரண ஆய்வு முறை உபயோகிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள்: நற்செய்தி நூல்களின் அடிப்படையில் இயேசுவிடம் மிளிர்ந்த விருந்தோம்பல் பண்புகளினுடைய சிறப்புக்கள் இனங்காணப்பட்டுள்ளன. சமகால விருந்தோம்பல் பண்புகளினுடைய நிலைப்பாட்டினை மதிப்பீடு செய்தல். தங்கள் கனிவான உபசரிப்பாலும், அன்பான நடத்தையாலும் விருந்தினர்களைக் கவனித்துக் கொள்வதே விருந்தோம்பலின் குறிக்கோளாகும். மேன்மைமிக்க கிறிஸ்தவ குணமாகவிருந்தோம்பல் பண்பைக் கடைப்பிடித்து கடவுளுக்கு விருப்பமான வாழ்க்கை வாழ்தல். சமகாலத்தில் விருந்தோம்பல் என்ற செயல் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை  மட்டும் அழைத்து அவர்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் உறைவிடம் அளிக்கும் அன்பின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது. ஆனால் நற்செய்தி நூல்களின் &#xD;
அடிப்படையில் இயேசு பாகுபாடு இன்றி அனைவருக்கும் விருந்தோம்பினார்.ஆய்வின் பரப்பு, வரையறைகள்: புதிய ஏற்பாட்டில் 27 நூல்கள் காணப்பட்ட பொழுதிலும் இவ் &#xD;
ஆய்விற்கு நான்கு நற்செய்தி நூல்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் நூல்களில் உள்ள விடயங்கள் ஆய்வினை ஆழப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு இயேசு எவ்வாறு விருந்தோம்பலில் ஈடுபட்டார் என்ற விடயங்கள் வரையறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் உட்கோள்கள்: ஆய்வின் உட்கோள்கள் இரண்டு முன்வைக்கப்பட்டுள்ளன. விருந்தோம்பலின் சிறப்புப் பண்புகளை நிலைநாட்டுவதற்கான கோட்பாடுகளை நற்செய்தி நூல்கள் முதன்மையானதாகத் தன்னகத்தே கொண்டுள்ளன. இயேசு தனது பகிரங்கப் பணி வாழ்வில் விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.</summary>
    <dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>Wellness tourism: unmet human need development management level perspectives from wellness retreats in sri lanka</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5789" />
    <author>
      <name>Perera, L.A.P.C.</name>
    </author>
    <author>
      <name>Balasooriya, B.L.P.C.</name>
    </author>
    <author>
      <name>Wanathunga, A.I.</name>
    </author>
    <author>
      <name>Suraweera, S.A.D.P.S.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5789</id>
    <updated>2022-10-21T08:29:45Z</updated>
    <published>2022-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: Wellness tourism: unmet human need development management level perspectives from wellness retreats in sri lanka
Authors: Perera, L.A.P.C.; Balasooriya, B.L.P.C.; Wanathunga, A.I.; Suraweera, S.A.D.P.S.
Abstract: Purpose: Wellness as a lifestyle refers to a spatial state of health, incorporating the harmony of body, mind and spirit. To diver the best quality wellness experience to the guests, the staff engaged in the wellness industry plays the major role. Though the employees are satisfied, they still have unmet human needs to be developed. This paper is designed to outline those unmet needs and to identify the possible strategies that can be proposed. Methodology: This study focuses on outlining the unmet human needs of workers in the Wellness Retreats in Sri Lanka while identifying the possible strategies that can be taken to meet the unmet needs of employees. In order to achieve the objectives of the &#xD;
study ten Wellness Retreat centers were selected as the sample and interviewed, employing judgmental sampling. The research is based on qualitative design and analyzed using thematic analysis. A detailed analysis was applied to narrate the answers given by the respondents using three sub themes as: Vocational Training Needs, Soft Skills Needs and Social Recognition Needs.  Findings: The study identified Human Development Needs as the parental theme and Vocational Training Needs, Soft Skills Needs and Social Recognition Needs as the sub themes. The employees highlights their vocational training needs as their most and foremost unmet needs. Basics on wellness and Aurvedic therapy, foreign language &#xD;
knowledge, online and physical training opportunities, institutional level course on theoretical and physical learning, knowledge on cosmetology treatment practices, national institute to give industry recognized certificates, vocational training on beauty, therapy and acupuncture handling, health dietary planning, vocational training diplomas or NVQ level programs were emphasized by them. They emphasize the way to become SMART employee, diplomatic nature, and emotional intelligence, especially on the self-disciplines. Research Limitations: The main limitation was the difficulty to diagnosis employees attributed to health and wellness sector especially due to limited numbers of health and wellness retreats in Sri Lanka. Their reluctant to express their true feelings due to job security was another limitation. Implications: Workers in the wellness sector demand for diplomas or NVQ level &#xD;
certification. Providing a certification will add value to the person as well to the industry. This can be highlighted as one of the practical implications of this research work. The authors need to highlight the necessity of providing them with a valid license certificate. The study mainly relies upon positive implications to both managerial levels and socioeconomic aspects. The management can decide what type of cognitive changes that needs to implement to meet the unmet needs of their employees. Accordingly, they can decide what humanistic learning theory and behavioral theories that could be adopted to meet the unmet employee needs. As well, self-efficacy of the employees will boom and dignity and pride based on the job satisfaction can be assured.</summary>
    <dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
</feed>

