<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <title>DSpace Community:</title>
  <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10129" />
  <subtitle />
  <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10129</id>
  <updated>2026-04-04T12:20:15Z</updated>
  <dc:date>2026-04-04T12:20:15Z</dc:date>
  <entry>
    <title>பெற்றோரிடமிருந்து விலகியிருக்கும் கட்டிளமைப்பருவப் பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள் ஓர் ஆய்வு  (கண்டி பல்கும்புர 475 கிராமசேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்டது)</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12382" />
    <author>
      <name>Padmasani, K.</name>
    </author>
    <author>
      <name>Sawundariya, S.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12382</id>
    <updated>2026-03-19T04:40:42Z</updated>
    <published>2025-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: பெற்றோரிடமிருந்து விலகியிருக்கும் கட்டிளமைப்பருவப் பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள் ஓர் ஆய்வு  (கண்டி பல்கும்புர 475 கிராமசேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்டது)
Authors: Padmasani, K.; Sawundariya, S.
Abstract: மனித வாழ்கைப்பருவத்தின் முக்கியமான பருவகாலமாக கட்டிளமைப்பருவம் காணப்படுகிறது. இப்பருவமானது 11 முதல் 20 வயதுவரையான காலப்பகுதியாகும். இப்பருவத்தில் கட்டிளமைப்பருவபிள்ளைகளிடம் உடல், உள, சமூக மற்றும் அறிவுசார் வளர்ச்சி மற்றும் விருத்திகள் ஏற்படுகின்றன. இப்பருவத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்க்காகவும் உடல், உளமாற்றங்களால் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காகவும் பெற்றோர் பிள்ளைகளுடன் இருத்தல் அவசியமானது. பெற்றோரிடமிருந்து விலகியிருக்கும் பிள்ளைகள் உடல், உள, கல்வி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். கட்டிளமைப்பருவத்தினர் எதிர்கொள்ளும் கல்வி ரீதியான சவால்கள் அவர்களின் எதிர் காலத்தையும் பாதிக்கின்றது. அந்தவகையில் கண்டி 475 கிராம சேவகர் பிரிவைச்சேர்ந்த பெற்றோரிடமிருந்து விலகியிருக்கும் கட்டிளமைப்பருவபிள்ளைகள் 50 பேர் எளிய எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் ஆய்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 46மூ பெண்பிள்ளைகள் (n ஸ்ரீ23) மற்றும் 54மூஆண்பிள்ளைகளைக் (nஸ்ரீ27) கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள பிள்ளைகயின் பெற்றோர்களில் ஒருவர் வீட்டுபணிக்காக வெளிநாட்டிற்க்கு சென்றுள்ளார். உள்நாட்டில் வசிக்கும் பெற்றோர்கள் வெளிமாவட்டங்களில் தங்கி பணிபுரிபவர்களாகவும் , விவகரத்து பெற்றவர்களாகவும் வேறுதிருமணம் செய்து கொண்டவர்களாகவும் பிள்ளைகளின் தந்தைமார் குடிபழக்கத்திற்க்கு உள்ளானவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களில் 62மூ மானபிள்ளைகள்தங்களின் மூத்தப்பெற்றோரின் பராமரிப்பிலும் 12மூ பிள்ளைகள் தாய் அல்லது தந்தையின் சகோதரர்களின் பராமரிப்பிலும் வளர்கின்றனர். இவ் 50 மாதிரிகளிடமிருந்தும் முதலாம் நிலை தரவு சேகரிப்பானது வினாக்கொத்து நேரடிக அவதானம், நேர்காணல் மற்றும் கலந்துரையாடல், மூலமாகவும் இரண்டாம் நிலை தரவுகள் ஆய்வு கட்டுரைகள் புத்தகங்கள் இணையதளங்கள் ஊடாகவும் சேகரிக்கப்பட்டு அளவு சார் பண்பு சார் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அளவு சார் விபரண ஆய்வாக மேற்க்;கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பெற்றோரிடம் இருந்து விலகியிருக்கும் கட்டிளமைப் பருவத்தினரில் 58மூ பிள்ளைகள் கல்வி மீதான ஆர்வமற்றவர்களாவும் 42மூ பிள்ளைகள் கல்வி கற்பதற்க்கு ஆர்வம் கொண்டவர்களாவும் காணப்படுகின்றனர்; அத்துடன் அவர்களின் கல்வியில் குடும்பபிண்ணனி மற்றும் சுழல் என்பன செல்வாக்குச் செலுத்துகின்றன. பெற்றோரிடம் இருந்து விலகியிருக்கும் பிள்ளைகளுக்கு உயர்கல்வி மற்றும் அதன் ஊடாக கிடைக்கக்கூடிய தொழில்வாய்ப்புக்கள் பற்றிய விழிப்புணர்வுகளை  வழங்குவதுடன் அவர்கள் தங்கி கல்வி கற்பதற்கான விடுதி வசதிகளைப் பாடசாலையுடன்&#xD;
இணைந்த வகையில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் போன்ற பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் இவ்வாய்வானது அமைந்துள்ளது.</summary>
    <dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>உள்நாட்டுப்போரின் பின்னரான காலப்பகுதியில் பெண்கள் மற்றும் சிறுவர்களது நலன்களில் சாவகச்சேரிப் பிரதேச செயலகம்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12381" />
    <author>
      <name>Arundavaraja, K.</name>
    </author>
    <author>
      <name>Aninthyani, N.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12381</id>
    <updated>2026-03-19T04:03:54Z</updated>
    <published>2025-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: உள்நாட்டுப்போரின் பின்னரான காலப்பகுதியில் பெண்கள் மற்றும் சிறுவர்களது நலன்களில் சாவகச்சேரிப் பிரதேச செயலகம்
Authors: Arundavaraja, K.; Aninthyani, N.
Abstract: மக்களின் தேவைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் அரசின் திட்டங்களை மக்களிடையே நடைமுறைப்படுத்துவதற்கும் பொதுத்துறை நிர்வாகமானது இலங்கையில் அதன் பங்களிப்பினை காலத்திற்குக் காலம் நல்கி வந்துள்ளது. அவ்வகையில், ஆங்கிலேயரது காலத்திலிருந்து ஆரம்பித்த நவீன நிர்வாகமுறையின் தொடர்ச்சியான வளர்ச்சித்தன்மையினை தற்காலம்வரை இலங்கையில் அவதானிக்க முடிகின்றது. இத்தகைய வளர்ச்சிகளில் ஒன்றாகவே பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற பிரதேச செயலகங்களைக் குறிப்பிடலாம். பிரதேச நிர்வாகமானது மணியக்காரர் முறையில் ஆரம்பித்து இன்று பிரதேச செயலகம் என்ற அமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. மாகாண, மாவட்ட மட்டங்களில் பணிகளினை மேற்கொள்கின்றபோது ஏற்படுகின்ற அசௌகரியங்களை நீக்குவதற்காக 1992ஆம் ஆண்டில் பிரதேச செயலகங்களை நோக்கி அதிகாரம் பரவலாக்கப்பட்டது. இதன் பின்னர் அவ்வப்பகுதிகளில் மக்களுக்குத் தேவையான பல்வேறு சேவைகள் வழங்கி வரப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான சேவைகளும் குறிப்பிடத்தக்கன. இலங்கையில் வடபகுதியில் காணப்படுகின்ற சாவகச்சேரிப் பிரதேச செயலகமானது பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாகப் பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை உள்நாட்டுப் போரின் பின்னராக மேற்கொண்டு வருகின்றது. அதாவது, பெண்களுக்கான சுயத்தொழில் வாய்ப்பு, உளநல ஆலோசனை, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உதவி, சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல், பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களுக்கான வழிகாட்டல், அரசசார்ப்பற்ற நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கியுள்ளது. அவ்வகையே பயனாளிகளுக்கிடையே பிரதேச செயலகப் பணிகள் தொடர்பான திருப்தியின்மை காணப்படுவதுடன் பிரதேச செயலக வளப்பங்கீடானது சரியான முறையில் பேணப்படவில்லை என்பன கருதுகோள்களாகக் காணப்படுகின்றன. இவ்வாய்வானது சாவகச்சேரிப் பிரதேச செயலகத்தின் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அதனை மேற்கொள்கின்றபோது ஏற்பட்ட பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை முன்வைத்தல் என்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது. இவ்வாய்விற்கான தரவுகள், களவாய்வு, நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், நூல்கள், வினாக்கொத்துப்படிவம் போன்றவற்றின் மூலம் சேகரிக்கப்பட்டு வரலாற்று அணுகுமுறையிலமைந்த விவரண ஆய்வாக மேற்கொள்ளப்படுகின்றது. வளப்பங்கீட்டினை உரியமுறையில் பேணுவதுடன் பெண்கள் மற்றும்  சிறுவர்களது குறைகளினைக் கேட்டறிந்து அவர்களினுடைய தேவைகளை நிறைவேற்றுவதனூடாக சாவகச்சேரிப் பிரதேச செயலகமானது மேலும் உன்னதமான நிலையினை அடையமுடியும் என்பது இவ்வாய்வின் முடிவாகும்.</summary>
    <dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>சமகாலச் செல்நெறியில் சைவசமூகத்தின் இயங்கியல்: வலிகாமம் தெற்குப் பிரதேசத்தை முன்னிறுத்திய ஆய்வு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12379" />
    <author>
      <name>Thilaxshana, T.</name>
    </author>
    <author>
      <name>Selvamanoharan, T.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12379</id>
    <updated>2026-03-13T05:19:52Z</updated>
    <published>2025-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: சமகாலச் செல்நெறியில் சைவசமூகத்தின் இயங்கியல்: வலிகாமம் தெற்குப் பிரதேசத்தை முன்னிறுத்திய ஆய்வு
Authors: Thilaxshana, T.; Selvamanoharan, T.
Abstract: ஈழத்து சூழலில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தை கட்டமைப்பதில் சைவ சமயமானது பெரும் பங்கு வகித்து வருகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேசத்தை ஆய்வுத் தளமாகக் கொண்டு சைவ சமூகத்தின் சமகால இயங்கியலை ஆராய்வதாக இந்த ஆய்வு அமைகின்றது. ஆய்வில் வலிகாமம் தெற்குப் பிரதேசத்தில் உள்ள இடங்கள் ஆய்வு எல்லையாக பயன்படுத்தப்படுகின்றது. யாழ்ப்பாண சமூகமானது நீண்ட பாரம்பரியமுடையதாக மிளிர்கின்றது சமகாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, யுத்தத்தின் பின்னரான மனோநிலை, மதமாற்றம் போன்ற பல காரணிகள் இச்சமூகத்தில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கிக் கொண்டு வருகின்றன. அந்த அடிப்படையில் சைவ சமூகத்தில் தற்கால இயங்கியலில் ஏற்பட்டிருக்கின்ற சவால்கள், மாற்றங்கள,; பாதிப்புகள் எத்தகைய தன்மை உடையனவாக இருக்கின்றன என்பதனை மையமாகக் கொண்டதாக இந்த ஆய்வுப்பிரச்சினை அமைகின்றது. ஆய்வு நோக்கமானது சமகாலத்தில் வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் சைவ சமூகத்தின் இயங்கியல் எத்தகைய தன்மை வகிக்கின்றது என்பதாகும். இந்த ஆய்வானது விபரண ஆய்வு, வரலாற்று முறை ஆய்வு என்பனவும் கள ஆய்வும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சமகாலச் சூழலில் சைவ சமூகம் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்றது நவீன காலத்திற்கு ஏற்ப சைவ சமூகம் தனது பாரம்பரியத்தை பாதுகாத்து புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே இச்சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதன் எதிர்கால முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்படுகின்றன. அவ்வகையில் சமய அடையாளத்தை காக்கும் நடவடிக்கைகளில் பிரதேசத்தினர் ஈடுபட வேண்டும். இப்பிரதேசத்தின் கோவில்கள் கலாசாரங்கள் என்பவற்றை பாதுகாக்க ஆய்வுகளை மேற்கொண்டு அதனை ஆவணம் ஆக்குதல் வேண்டும். மேலும் சைவ சமுதாயத்தின் பொருளாதார நிலை மேம்பட ஆலயங்களின் வருவாயில் ஒரு பகுதியினை சமுதாய நலத்திட்டங்களில் பயன்படுத்தலாம். இந்த ஆய்வினை மேற்கொள்வதன் ஊடாக வலிகாமம் தெற்குப் பிரதேசத்தில் உள்ள சைவ சமூக மக்களின் மத மரபுகள், சமூகம் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் பண்பாட்டு சிந்தனைகள் என்பவற்றினை அறிய விரும்பும் ஆய்வாளர்களுக்கு உதவியாக காணப்படுவதுடன் அப்பிரதேசத்தின் சைவ சமூகத்தின் தற்கால போக்கினைப் பற்றியும் அறிய உதவியாக அமையும்.</summary>
    <dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>ஹரி மிலர் அடிகளாரின் சமூக உருவாக்கப் பணிகள்: ஒரு கிறிஸ்தவ சமூகவியற் பார்வை</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12378" />
    <author>
      <name>Anesda, R.</name>
    </author>
    <author>
      <name>Paul Rogan, J.K.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12378</id>
    <updated>2026-03-13T04:55:18Z</updated>
    <published>2025-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: ஹரி மிலர் அடிகளாரின் சமூக உருவாக்கப் பணிகள்: ஒரு கிறிஸ்தவ சமூகவியற் பார்வை
Authors: Anesda, R.; Paul Rogan, J.K.
Abstract: கடவுளின் படைப்புகளில் மேலான படைப்பாகக் கருதப்படுகின்ற மனிதனுக்குக் கிறிஸ்தவத்தில் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மனிதனானவன் ஒரு சமூகப் பிராணி. ஆகையால் அவன் சமூகமாகவே வாழ அழைக்கப்பட்டுள்ளான். அந்தவகையில் இச்சமூகத்தில் ஒரு மனிதன் பல பணிகளைச் செய்யும் போதும் அவருடைய பணிகளையோ அவர் செய்த நல்ல விடயங்களையோ எண்ணிப் பார்க்கும் தன்மை என்பது குறைவாகவே காணப்படுகிறது. இப்பின்னணியில் அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தில் (1924) பிறந்து, வளர்ந்து, இயேசு சபையில் இணைந்து ஓர் அருட்சகோதரராக இலங்கைக்கு வருகை தந்து, தொடர்ந்து தமது இறையியல் கல்வியை முடித்து ஓர் அருட்தந்தையாய் இலங்கையில் பணியாற்றினார். மிலர் அடிகளார் அண்ணளவாக 70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் மட்டக்களப்பு மண்ணில் பணிகளை மேற்கொண்ட போதும் அவருடைய பணிகள் குறித்த தெளிவாக்கங்கள் மக்கள் மத்தியில் மிகக் குறைவாகக் காணப்படுகின்றமை ஆய்வுப் பிரச்சினையாக நோக்கப்பட்டு, மறைந்த அமரர் ஹரி மிலர் அடிகளாரின் சமூக உருவாக்கப் பணிகளை கிறிஸ்தவ சமூகவியற் பார்வையில் எடுத்துரைப்பது ஆய்வின் பிரதான நோக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆய்வில் இயேசு சபையின் வரலாற்றை அறிமுகம் செய்ய வரலாற்று முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் திருவிவிலியம், நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றினூடாக பெற்றுக்கொண்ட தரவுகள் தொகுத்தறிவு முறையூடாக முன்வைக்கப்படுவதுடன், மிலர் அடிகளாருடைய சமூக உருவாக்கப் பணிகள் பற்றிய விடயங்களைப் பெறுவதற்கு நேரடி சந்திப்பு செய்ததால் நேர்காணலும், அவதானிப்பு முறையும் பயன்படுத்தப்படுகின்றது. கிறிஸ்தவ சமூகப் போதனைகளோடு அடிகளாரின் பணிகளை ஒப்பிடுவதால் ஒப்பீட்டு ஆய்வு முறையியல் பயன்படுத்தப்படுகின்றது. அடிகளார் வாழ்ந்த யுத்த காலச் சூழ்நிலையில் சாதாரண மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டனர். மக்களுடைய உரிமைகள், உடைமைகள் இழக்கப்பட்டு பலர் காணாமல் ஆக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். இத்தகைய சந்தர்ப்பங்களில் அடிகளார் மக்களுக்கான நீதியை, சமாதானத்தைப் பெற்றுக்கொடுக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். சமாதானப் பேரவை, சமய நல்லிணக்கப்பேரவை, புற்றுநோய்க்கழகம் போன்றவற்றை அமைத்ததோடு ரோட்டரி கழகம், கிழக்கு தொழிநுட்ப நிறுவகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பல அமைப்புக்களின் தலைவராக, அங்கத்தவராய் பல பணிகளை மேற்கொண்டுள்ளார். இவற்றின் மூலமாக இன்று வரையும் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திரு அவையினுடைய அனைத்து சமூக போதனைகளும் மனித மாண்பை வலியுறுத்தியே அமைகின்றன. இதன்படி மனிதன்  அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதே நீதியாகும். அடிகளார் இதனை முன்னிறுத்தியே தமது&#xD;
சமூக உருவாக்க பணிகளை மேற்கொண்டிருந்தார். அடிகளாரைப் பற்றி பெற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் அவருடைய சமூக உருவாக்கப் பணிகளை ஆராய்ந்து அவற்றைக் கிறிஸ்தவ சமூகவியல் பார்வையில் வெளிப்படுத்துவதாக இவ் ஆய்வானது அமைந்துள்ளது.</summary>
    <dc:date>2025-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
</feed>

